இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசில் முஸ்லிம்களுக்கு தற்போது 4.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல், தமிழகத்தில் 3.5 சதவீதம் ஒதுக்கீடு என்பதை 5 சதவீதமாக உயர்த்தியும் வழங்க வேண்டும்.மேலும், மதுக்கடையால் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பமும் சீரழிந்து வருகிறது. அதனால், இந்தியாவில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.